பத்தரமுல்லை பிரதேசத்திற்கு மின்வெட்டு…

அவசர திருத்தப் பணிகள் காரணமாக பத்தரமுல்லை பிரதேசத்தினை அண்டிய பகுதிகள் சிலவற்றுக்கு தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பத்தரமுல்லை சந்தியிலிருந்து 174 இலக்க வீதியில் பாலம் துன சந்தி வரையில் ஜயந்திபுர, தலங்கம ஆகிய பிரதேசங்களுக்கு இன்று(22) காலை 08.30 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை குறித்த பிரதேசங்களுக்கு மின்வெட்டு அமுலுக்கு இருக்கும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

-Rishma