பம்பலபிட்டியில் பொலிஸ் அதிகாரி விபத்து – டிபென்டரின் சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில்…

(FASTNEWS|COLOMBO) பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வாகனத்தின் சாரதியை தொடர்ந்தும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்திர நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.