நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பல பாகங்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுவதாக வானியல் அவதான நிலையம் மக்களை எச்சரித்துள்ளது.
மேலும், காற்றின் தாக்கத்தினால் பம்பலப்பிடிய ரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்ததில் இரு வாகனங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் சாரதிகளுக்கு மாற்றுப் பாதைகளை பாவிக்குமாறும் காவற்துறை கோரியுள்ளனர்.
(rizmira)