பம்பலப்பிட்டி ஷகீப் கொலை – இரு வியாபாரிகளின் கடவுச்சீட்டு இரத்து.

பம்பலப்பிட்டி வியாபாரி சுலைமான் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு வியாபாரிகளின் கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு வியாபாரிகளிடமும் இரகசியப் பொலிஸார் ஆறாரை மணி நேர விசாரணையை மேற்கொண்டு வாக்குமூலத்தினைப் பதிவு செய்துள்ளனர்.

இவ்விருவரில் ஒருவர், கொலை  செய்யப்பட்ட வியாபாரியுடன் நெருக்கமான வர்த்தகக் கணக்கு வழக்குகளைப் பேணி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் ஒரு கோடி ரூபாய் வர்த்தகருக்குக் கொடுக்க வேண்டியுள்ளமையும் தெரியவந்துள்ளது.