(FASTNEWS|COLOMBO) பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பும் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான றுவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பியகம ஸ்ரீ புண்ணியவர்த்தனாராம விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.