தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை

(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட 9 பயங்கரவாதிகளின் கைப்பேசிகளுக்கு கிடைக்கப்பெற்ற சுமார் 1800க்கும் அதிகமான அழைப்புக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை , உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் 66 பேரும் மற்றும் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் 21 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.