பயங்கரவாதிகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை.. – பதில் பொலிஸ் மாஅதிபர்

(FASTNEWS | COLOMBO) – நாட்டில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டு விட்டதாகவும், மேலும், தீவிரவாதிகளால் எதிர்காலத்தில் தாக்குதல் மேற்கொள்ள மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களும் சுற்றிவளைக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் சீ.டி.விக்ரமரத்ன தெரிவித்திருந்தார்.

எனவே, மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை அச்சமின்றி முன்னெடுக்க முடியும் எனவும் பதில் பொலிஸ் மாஅதிபர் சீ.டி.விக்ரமரத்ன, பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.