(FASTNEWS| COLOMBO) – பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் உட்பட 03 பேரும் பிணையில் விடுதலை செய்ய சட்ட மா அதிபர் பரிந்துரை வழங்கியுள்ளார்.
அதற்கமைய ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.