பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மேலும் ஐவர் கைது

(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் ஹொரவபொத்தானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கெபிதிகொல்லேவ மற்றும் ஹொரவ்பொத்தானை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.