பயணசீட்டு வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் போக்குவரத்திற்கான பயணசீட்டு பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இன்று(17) முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.