பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் ஊடான ஆய்வு இன்று(28) முதல் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
பேரூந்து, புகையிரதம், முச்சக்கர வண்டி சேவைகள் ஊடாக மக்கள் எதிர்பார்க்கின்ற எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்டறிவது இதன் முதன்மை நோக்கம் என அதன் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்திருந்தார்.