பரீட்சையின் போது கைத்தொலைபேசியை பயன்படுத்திய மாணவன் குறித்து விசாரணைகள் ஆரம்பம்…

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் கணிதப் பாட பரீட்சைக்கு விடையளிப்பதற்காக கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய மற்றொரு மாணவன் குறித்து விசாரணகளை பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து பரீடசைக்குத் தோற்றிய மாணவர் ஒருவரே இவ்வாறு பரீட்சை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை இம்முறை க.பொ. த. பரீட்சை தொடர்பில் தற்போது வரை 15 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.