பலாலி விமான நிலையத்தினை பிராந்திய நிலையமாக மாற்ற நடவடிக்கை…

யாழ்பாணம், பலாலி விமான நிலையத்தினை பிராந்திய நிலையமாக மாற்றுவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக நேற்று(27) அலரி மாளிகையில் இடம்பெற்ற வடக்கு அபிவிருத்தி கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

பலாலி விமான நிலையத்தினை இந்தியாவின் நிதி உதவியுடன், நிர்மாணிக்கவுள்ளதாகவும், இதற்காக எதிர்வரும் 10ம் திகதி இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்குடன் யாழ்ப்பாணம் சென்று அவதானிக்க உள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்திருந்தார்.