(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பலாலியில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை முயற்சிகளை எடுத்து வருவதோடு ஒக்டோபர் நடுப்பகுதியில் விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.