பல்கலைகழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் இன்று(06) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
தங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக சகல பணியாளர்களும் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்கலைகழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டத்திற்கு இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பல்கலைகழக நிறைவேற்று தர அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.