பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக மாணவர்களை இணைக்கத் திட்டம்

நாடளாவிய ரீதியில் இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல் 2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

2,000 மாணவர்கள் தொழில்நுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டீ.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 5 பல்கலைகழகங்களில் தொழில்நுட்பவியல் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.