பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்…

2018ம் ஆண்டுக்கான க பொ த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை ஒன்-லைன் முறையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும், இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை இன’று முதல் முதல் முகவர் புத்தகக் கடைகளை விலைக்கு வாங்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.