(FASTNEWS|COLOMBO) – சம்பள முரண்பாடுகளை நீக்குதல், எம்.சி.ஏ. கொடுப்பனவை அதிகரித்தல், பல்கலைக்கழகங்களுக்குப் பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்குத் திறந்த போட்டிப் பரீட்சைகளை நடாத்துதல் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்து, அடையாளப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, அனைத்துப் பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக பிரியந்த தெரிவித்துள்ளார்.
குறித்த இந்தப் பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவு வழங்குவதாக யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் அறிக்கை வௌியிட்டுள்ளது.