பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு இன்றும் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பளப் பிரச்சினையை முன்வைத்து பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று(12) மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

இதுவரை தமது கோரிக்கைகள் தொடர்பில் எந்தவொரு அதிகாரியும் கவனம் செலுத்தவில்லை எனவும் எனவே தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க போவதாக குறித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கே.எல்.டீ.ஜே. ரிச்மண்ட் தெரிவித்தார்.