தமது போராட்டத்தை எட்டாவது நாளாக இன்றும்(07) மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று(06) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இன்று(07) பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.