பல கோரிக்கைளை முன்வைத்து 44 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று(17) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப தீர்மானித்துள்ளனர்.
தமது கோரிக்ககைள் குறித்த சுற்றுநிரூபம் அண்மையில் பொறுப்புக்குரிய அமைச்சரால் வெளியிடப்பட்டமையை தொடர்ந்து இன்று(17) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப தீர்மானத்தை மேற்கொண்டதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைப்பாளர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.