பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப் புள்ளி இவ்வார இறுதியில்…

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப் புள்ளிகள் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என்று பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய இந்த வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படவுள்ளன.

இதேவேளை, பல்கலைக்கழக நுழைவுக்கான 50 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை பல்கலைக்கழங்களுக்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.