பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்க உள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு நீதிமன்ற உத்தரவு…

பல்கலைக்கழக மாணவர்களால் இன்று(21) முன்னெடுக்கப்பட இருந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறும், அரச நிறுவனங்களுக்குள் உட்பிரவேசிக்காதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.