பல்கலைக்கழக மாணவர்களின் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் – வாட் பிளேஸ் வீதிக்கு பூட்டு…..

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் காரணமாக கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் கடுமையான வாகன நெரிசல் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக வாட் பிளேஸிலுள்ள பிரதான வீதியில், ஒழுங்கையொன்றும் மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.