பல்கலைக்கழக மாணவியொருவரை கற்பழித்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல கோடீஸ்வரர் ஒருவரின் மகனுக்கு 37 வருட கடூழியச் சிறைத் தண்டனையுடன் 27 லட்சம் ரூபா அபராதமும் விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, 45 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் குற்றவாளிக்கு நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார்.
வத்தளை, ஹுனுப்பிடியவைச் சேர்ந்த ஹேவாதந்திரிகே நுவன் ஜனக (28 வயது) என்ற சந்தேகநபருக்கு எதிராகவே நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.