பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கைக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு வெலிகடை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் சங்கங்கள் இரண்டு, பாராளுமன்ற வளாகம் வரை எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ள தீர்மானித்திருந்தன.
இந்த போராட்டத்திற்கு தடையுத்தரவு விதிக்குமாறே பொலிஸார் கோரியிருந்தனர்.