நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கு அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.