நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(22) பிற்பகல் வேளை மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.