பல பிரதேசங்களில் 28 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருத்தப்பணிகள் காரணமாக கண்டி நகரின் பல பிரதேசங்களில் 28 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

இதன்படி, வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் உடுநுவர, கெலிஓய, வெலிகல்ல, ஏகொட களுகமவ, மோகொட களுகமவ அம்பகுபுர, கனேகொட தவுலகல, ஹித்தவுல மற்றும் பிலிமதலாவ பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு இட்பெறவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.