ஹொரணை கனன்வில பழவகை ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள பழவகை தொழில்நுட்ப கண்காட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கிராமசக்தி வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த நிறுவனத்திற்கு அருகாமையில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
இங்கு பழ விற்பனை, பழவகைகளினால் தயாரிக்கப்பட்ட பானங்கள், பழமரக்கன்றுகள் விற்பனை ஆகியன இடம்பெறவுள்ளன. ஏற்றுமதி தொடர்பான தகவல்களையும் கண்காட்சி மூலம் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.