(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களான அஜித் பீ.பெரேரா, ரோஸி சேனாநாயக்க, இம்தியாஸ் பாகிர் மாக்கார், சரத் பொன்சேகா ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று(30) டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
இன்று மாலை கூடும் ஐக்கிய தேசிய கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட செயற்குழு கூட்டமானது ஆரோக்கியமான ஒரு ஆயத்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
@officialunp leader @RW_UNP has sacked @sajithpremadasa loyalists @ajithpperera_p @bakeermarkar @generalfonseka @Rosy_Senanayake from working committee last night before today’s meeting to agree on ‘settlement’. Certainly not a good omen.
— Harsha de Silva (@HarshadeSilvaMP) January 30, 2020