பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 27 பேர் பலி…

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேரூந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ராய்விண்டில் நடைபெற இருந்த மத பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று(08) இரவு 100 க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சென்றுள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 69 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.