பாகிஸ்தானில் பாதுகாப்பும், சுதந்திரமும் இல்லை – முன்னாள் பயிற்சியாளர் கிரான்ட் ப்ளவர்

(FASTNEWS | COLOMBO) – பாகிஸ்தானில் பாதுகாப்பும், சுதந்திரமும் இல்லையென அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரான்ட் ப்ளவர் (Grant Flower )தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் அரசியல் குழப்பங்களும் இருப்பதால் அணியின் வீரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில்லையென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் போட்டிகள் இடம்பெற இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.