துருக்கி நாட்டின் தலைநகரான அங்கராவில் பாகிஸ்தான்-துருக்கி நாடுகளுக்கிடையேயான உயர் நிலை இராணுவக்குழுவின் (HLMDG) 11-ம் சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு ராணுவத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி T-37 என்ற பயிற்சி மற்றும் போர் விமானங்கள் 34-ஐ துருக்கியிடமிருந்து பாகிஸ்தான் இலவசமாக பெறுகிறது.