பாகிஸ்தானுக்கு எதிரான டி2௦ ஐ இலங்கை கைப்பற்றும் – மலிங்க

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றும் என இலங்கை அணித்தலைவர் மலிங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதனை தொடர்ந்து, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று வியாழன் (30) நடைபெறுகின்றது. இப்போட்டியில் ஐந்து புதுமுக வீரர்கள் களமிரங்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றும் என்று மலிங்கா தெரிவித்துள்ளார்.

மேலும், தெரிவு செய்யப்பட்டுள்ள இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

(riz)