பாகிஸ்தான் அணியினர் இந்தியா செல்ல அனுமதி

இந்தியாவில் இடம்பெறும் இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட்போட்டியில் பங்குபற்றுவதற்காக பாகிஸ்தான் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு அந்நாடு நேற்று(11) அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மார்ச் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதாக கொல்கத்தாவில் அமைந்துள்ள மேற்கு வங்க மாநில அரசாங்கம் உத்தரவாதம் அளித்தமையாலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.