லசித் மாலிங்க இலங்கையில் உள்ள சாம்பியன்ஸ் பந்து வீச்சாளர் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று(12) போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் லசித் மாலிங்க மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவாரா? என எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மேத்யூஸ், லசித் மாலிங்க கடந்த பல வருடங்களாக இலங்கை சார்பில் இருந்த பெறுமதியான வீரர் எனவும் தெரிவித்துள்ளார்.