பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கம்…

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிக்காக லாகூர் க்லேண்டேர்ஸ் அணிக்காக விளையாட இருந்த இலங்கை அணியின் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் குறித்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, மேத்யூஸ் இற்கு பதிலாக நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான என்டன் டேவ்ஸிச் லாகூர் அணிக்காக உட்சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகள் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma..