இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஆயுதப் படைகளின் பாதுகாப்பு உரையாடலில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் இக்ராம் உல் ஹக் உள்ளிட்ட குழுவினர் இன்று(02) இலங்கை வரவுள்ளனர்.
எதிர்வரும் 05ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.