உணவு சட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் ‘பாக்கு’ பாவனையை நீக்குவதற்காக புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புகையிலை போன்று பாக்கும் புற்றுநோய் ஏற்பட காரணியாக அமைவதால் இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று(07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.