பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் திருமதி தெஹ்மினா ஜன்ஜாவா 02 நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(17) இலங்கை வருகின்றார்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டு அமைச்சர் திலக் மார்ப்பன ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.