பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை…

அடுத்த வருடம் பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் அதிபர்கள் மற்றும் பேராசிரியர் சபை இதன்போது இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.