பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை(18) இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரெரா தெரிவித்துள்ளார்

இதன்போது, எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.