பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்…

2019 ஆம் ஆண்டிற்குத் தேவையான பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் திருமதி பத்மினி நாலிக வெலிவத்த தெரிவித்தார்.

மூன்று கோடியே 80 இலட்சம் பாடப் புத்தகங்கள் அச்சிடப்படவுள்ள நிலையில்,
அவற்றுள் இரண்டு கோடியே 40 இலட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இவற்றில் 50 சதவீதமானவை விநியோகிக்கப்பட்டிருப்பதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.