(FASTNEWS|COLOMBO) – கஹடகஸ்திகிலிய பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலிருந்து டெனேட்டர்கள் மூன்றும் வெடிமருந்து செய்யப் பயன்படுத்தப்படும் சேவா நூலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
பாடசாலை திறக்கப்பட்டதன் பின்னர் பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்டவாறு கிடந்த மூன்று டெடனேட்டர்களும், சேவா நூலும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து,பாடசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பெற்றோருடன் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகபாடசாலையின் அதிபர் ஐ.எம் மஹிந்த தெரிவித்துள்ளார்.