பாடசாலை சீருடைக்கான பற்றுச்சீட்டின் பெறுமதியினை அதிகரிக்க நடவடிக்கை

பாடசாலை சீருடைக்கான பற்றுச்சீட்டின் பெறுமதியினை அதிகரிக்க கல்வி அமைச்சினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு  மேலும் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 400 ரூபாவாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில காரியவசம் தெரிவித்துள்ளார்.