(FASTNEWS|COLOMBO)- இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதான வீதி மொரதொட பிரதேசத்தில் இன்று(17) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இரு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
விபத்தில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.