இரத்தினபுரி-குட்டிகல பிரதேசத்தில் மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகப்படுத்திய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சில புத்தகங்களைப் பெறுவதற்கு குறித்த மாணவி அதிபரின் வீட்டிற்குச் சென்ற வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது மாணவியே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து பாடசாலையின் அதிபரை குட்டிகல பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்