(FASTGOSSIP| COLOMBO) – அரசில் இருந்தவாறே பயங்கரவாதத்திற்கு எதிரான பரந்ததொரு முன்னணி ஒன்றினை ஏற்பாடு செய்வதாக ஜாதிக ஹெலஉறுமயவின் பொதுச் செயலாளர், அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பரந்த முன்னணிக்கு வடக்கிலும் தெற்கிலும் உள்ள அரசியல் தலைமைகள் மற்றும் பிரபலங்கள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் அரசிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்படும் செய்திகள் பொய்யானவை என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.