கடந்த ஆட்சி காலத்தில் பாதாள உலகக் குழுவிற்கு எதிராக குரல் எழுப்பிய சிவில் அமைப்புக்கள் தற்போது மௌனத்தைக் கடைபிடித்து வருவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தி சாடுகின்றார்.
இன்னும், தற்போதைய புதிய அரசாங்கத்தின் அனைத்து பிரச்சாரங்களும் அப்பட்டமான பொய் என்பது மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய பாதுகாப்புக்கான வேலைத் திட்டம் செயற்படுத்தப்படவில்லை என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே மேற்குறித்த கருத்துக்களையும் அவர் முன்வைத்தார்.
(riz)